Friday, 20 October 2017

தோட்டா

ஒருவனின் பெருங்கோபமா
இல்லை அவ்வொருவன்
சமூகத்தின் ஒரு துளியா
அவனின் விரல்கள் மீட்க 
பேரமைதியைக் கிழிக்கும்
பெருத்த இசையுடன்
ஆயுளைக் குடிக்க
அதீத விசை தோட்டா
மூச்சிற்கு முற்றுப்புள்ளி
அது எரியும் பெருந்தீயினை
அணைக்கும் நீர்த்துளியா
உறங்கும் மாமலையை
எழுப்பும் தீப்பிழம்பா
லிங்கனோ லேடனோ
ஹிட்லரோ காந்தியோ
சேகுவராவோ
பெனாசீர் பூட்டோவோ
அடக்குமுறையோ
அதிகாரமோ
அரசியலோ தான்
சரித்திர தோட்டாக்களின்
இயங்கு விசை
உடல் கிழித்து
சிதறும் குருதித் துளிகள்
எழுதுவதில்லை
இறுதி சாசனத்தை
படை பலத்தவனோ
பணம் படைத்தவனோ தான்
மடிந்தவன் கதையென
மந்தைகளுக்கு உரைப்பான்
இக்கணம்
யாரோ ஒருவன்
போதனையில்
எங்கோ ஒரு
துப்பாக்கியில்
உலக அமைதிக்கான
அடுத்த தோட்டா
அமைதியாய்
உறங்கிக்கொண்டிருக்கிறது


No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...