Monday 5 June 2017

யாதும் ஊரே யாவரும் கேளிர் ???

"யாதும் ஊரே
யாவரும் கேளிர்"
ஆசியர் பாடியதும்
ஆத்திரத்தில் மாணவன்.
யாதும் ஊரென
யாரவன் சொன்னது
கொதித்துப் போனவன்
கோபமாய் கொக்கரித்தான்
புதியதாய் வந்திருந்த
ஆசிரியர் அறியவில்லை
கடலெல்லை தாண்டியதால்
தோட்டாக்கள் உடல் துளைத்து
இருமாதம் முன்பு தான்
இறந்தார் இவன் தந்தையென


- ச நந்த குமார்

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...