Saturday 26 November 2016

முகமூடி மனிதர்கள்

பொய்யினை நாவில் வைத்து
சத்தியம் செய்யும் கரங்கள்

புன்னகை உதட்டில் பூசி
முதுகை கிழிக்கும் துரோகம்

நட்பென நைய்யப் பேசி
குழியில் தள்ளும் உறவு

காதலைக் கண்ணில் காட்டி
நெஞ்சைப் பிளக்கும் யுக்தி

ஜனனம் மரணம் மத்தியில்
வாழ்க்கை மிகவும் சிறிது

முகமூடி மனிதர் உலகில்
உண்மை காண்பது அரிது.


1 comment:

  1. Wow sema lines poyyinai naavil vaithu sathiyam seyyum karangal arumaiyana varigal i like it very much nandhu

    ReplyDelete

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...