கூட்ட நெரிசல்களிலிருந்தும்
இரைச்சல்களிலிருந்தும்
வழக்குகளிலிருந்தும்
வாதங்களிலிருந்தும்
கால்கள் ஓடத்துடிக்கும்
அந்தப் பேரமைதி
நிலப்பரப்பை அடைய
ஒரு கோப்பை மதுவோ
ஒரு புத்தகமோ
பார்த்துப் பிடித்த படமோ
பழகிய பாடல் வரிசையா
திக்குத் தெரியாமல்
செல்லும் நீள் பாதையோ
தேவையில்லை.
என்றும் முடிவுறா
வார்தைப் போர்களில்
கூர் வார்த்தைகள்
நெஞ்சை ரணமாக்கும்
ஒன்று
அசுரனாகலாம்
இல்லை
அமைதி காக்கலாம்
அசுரனாகிட வெறும்
ஆயுதங்கள் போதும்
அமைதி காக்கவே
நெஞ்சில்
அசுரபலம் வேண்டும்
இரைச்சல்களிலிருந்தும்
வழக்குகளிலிருந்தும்
வாதங்களிலிருந்தும்
கால்கள் ஓடத்துடிக்கும்
அந்தப் பேரமைதி
நிலப்பரப்பை அடைய
ஒரு கோப்பை மதுவோ
ஒரு புத்தகமோ
பார்த்துப் பிடித்த படமோ
பழகிய பாடல் வரிசையா
திக்குத் தெரியாமல்
செல்லும் நீள் பாதையோ
தேவையில்லை.
என்றும் முடிவுறா
வார்தைப் போர்களில்
கூர் வார்த்தைகள்
நெஞ்சை ரணமாக்கும்
ஒன்று
அசுரனாகலாம்
இல்லை
அமைதி காக்கலாம்
அசுரனாகிட வெறும்
ஆயுதங்கள் போதும்
அமைதி காக்கவே
நெஞ்சில்
அசுரபலம் வேண்டும்
No comments:
Post a Comment