Monday 26 November 2018

அசுர அமைதி

கூட்ட நெரிசல்களிலிருந்தும்
இரைச்சல்களிலிருந்தும்
வழக்குகளிலிருந்தும்
வாதங்களிலிருந்தும்

கால்கள் ஓடத்துடிக்கும்
அந்தப் பேரமைதி
நிலப்பரப்பை அடைய

ஒரு கோப்பை மதுவோ
ஒரு புத்தகமோ
பார்த்துப் பிடித்த படமோ
பழகிய பாடல் வரிசையா
திக்குத் தெரியாமல்
செல்லும் நீள் பாதையோ
தேவையில்லை.

என்றும் முடிவுறா
வார்தைப் போர்களில்
கூர் வார்த்தைகள்
நெஞ்சை ரணமாக்கும்

ஒன்று
அசுரனாகலாம்
இல்லை
அமைதி காக்கலாம்

அசுரனாகிட வெறும்
ஆயுதங்கள் போதும்
அமைதி காக்கவே
நெஞ்சில்
அசுரபலம் வேண்டும்

No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...