Sunday 12 February 2017

பூக்காரி

அவளிடம் தினமும் இருமுழம்
மல்லிகை வாங்கினான்.
காதலிக்காய் இல்லை
மனைவி மக்களும் இல்லை
அக்காள் தங்கை இல்லை
வீட்டில் கடவுளின் படங்களும் இல்லை
இருந்தும் தினமும் அவளிடம்
மல்லிகை வாங்கினான்.
அவளின் சுருக்கங்களுக்கிடையே
பூக்கும் முகத்திற்காய்
அவளின் பொக்கைவாயில்
மலரும் சிரிப்பிற்காய்,
அனைத்திற்கும் மேல் இவன் தாய்
செம்பகமும் பூக்காரி என்பதனால்
அவளிடம் தினமும் இருமுழம்
மல்லிகை வாங்கினான்.


No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...