Friday 10 February 2017

மெலினா

முகநூல் நட்பு Bulbul Esabella வின் சமீபத்திய கட்டுரை ஒன்றால் இன்று தான் இப்படத்தைப் பார்த்தேன்.. எளிதாக ஒருவரை பற்றி கிசு கிசுத்து விட்டு, அவரின் தூக்கங்களை களவாடி நாம் நிம்மதியாய் தூங்கிவிடுவோம்.. உண்மையை அறியாது பகிரப்படும் (பரப்பப்படும்) எந்த ஒரு செய்தியும் அது தொடபுடையோருக்கு எங்கோ ஏதோ ஒரு பாதிப்பினை நிச்சயம் ஏற்படுத்தும். பள்ளி, கல்லூரிகளில் கிண்டல் செய்வதும் கிசு கிசுப்பதும் சாதா(ரண)மாய் நிகழும் ஒன்று. அதிலும் அநேக / அனைத்து கிசு கிசுக்களின் கருவும் ஒன்றாகவே இருக்கும். பாதிக்கப்படுவதும் பெண்ணாகவே இருக்கும். மெலினா, இவளோ அசாத்திய தைரியமானவள். சுட்டெரிக்கும் பார்வைகள், செவிகேட்கா வார்த்தைகள், வசைமொழிகள், வன்புணர் உடல் மொழிகள், அனைத்தும் அனுபவித்தும், உயிர்வலியில் துடித்தும் உயிர்விடாது இருக்கிறாள். எத்தனையோ மெலினாக்கள் மெல்லிய மனமுடையவர்கள், மனமுடைந்து கயிற்றுக்கோ, விஷத்திற்க்கோ இரையாகிறார்கள். கேவளம் கிசு கிசுவும் வதந்தியுமா உயிர்குடிப்பது? கிசு கிசுக்கும் ஒவ்வொருவரும் (நான் உட்பட) வெட்க வேண்டிய விஷயம். நிச்சயமாய் மெலினா அனைவருக்கும் ஒரு பாடம்.
மெய்மை அற்றதை
மெய்ப்பொருள் காணாது
மெய்க்கொள்ள பகிர்ந்து
மெய்ப்பிக்க கதை கட்டி
மெய்மறக்கும் சமூகமே
மெலினாவைப் படித்து
மெய்ஞ்ஞானம் பெறுக


No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...