Monday 27 February 2017

பத்திரம்

பழைய வீட்டு
பத்திரம் தேடிக்
கிடக்கையில்
கண்ணில் பட்டது
பள்ளிப் புகைப்படம்.
பத்திரமாக தான்
வைத்திருந்தது
பாதியில் எங்கோ
தொலைந்து போனது.
தலை நரைத்தபின்
கிடைக்க பெற்றதில்
மனம் நிறைந்தது
முகம் மலர்ந்தது
பழைய நினைவுகள்
கதவை தட்ட
ஒவ்வொரு பெயரையும்
ஞாபகம் எட்ட
பள்ளி வாசனை
பரவிக் கிடக்க
இரவும் கடந்து
விடியல் வந்தது
பத்திரமாய் இதை
எடுத்தும் வைத்து
தேடிய பத்திரம்
மறந்தும் போனது.


No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...