Wednesday 11 October 2017

தீக்குச்சி

ஒரு அரசியல்
தலைவனின் கைதிற்கு
சில தொண்டர்கள் 
உரசிய குச்சி தான்
எலும்புக்கூடாய் பேருந்தும்
சாம்பலாய் சில உயிர்களும்
உயிரினும் உயரியதா
ஐந்து பவுன் தங்கம்.
தீரா வயிற்று வலியால் தான்
தீக்கிரையாகினாள் என
திரித்த கதையைத்தான்
தினசரிகள் சொல்லின
ஏழு வருடங்களாய் பல சோதிடர்கள்
சொன்ன பரிகாரங்களை செய்தவள்
இன்றும் பக்தியுடன் ஒரு தீக்குச்சி.
திரியின் நுனியில் சுடரும் ஒளியில்
கருணை வடிவாய் அவள் விழி
கண்ணீர்துளியுடன் இவள் விழி
விருப்பமில்லையென
வார்த்தைகளால் மறுத்திருக்கலாம்.
மதம்பிடித்தவன் மதிகெட்டு
பற்றவைத்த சாதியத்தீ
தீப்பிளம்பாய் கீழத்தெரு
சாம்பல்கூடாய் அவன்
முரண்களுடனே முடிவுற்ற உறவு
மூன்றாம் சுற்றின் முடிவில்
வெட்டியான் கிழித்த தீக்குச்சில்
பற்றிய அவன் நெஞ்சம்
இன்றும் புகைந்துகொண்டிருக்கிறது


No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...