Wednesday 11 October 2017

பெண் குழந்தை

கல்பனாவின் வசைகள் 
காவியாவின் முத்தத்தில்
மூழ்கி மறைந்தே போயின
கனகசபாபதிக்கு

இசைஞானியும்
இசைப்புயலையும் விட
இனியாவின்
நிலா நிலா ஓடிவாவில்
இலகியது
இளங்கோவின் இதயம்

கயலுக்காக
டைரி மில்க்
வாங்கும்போது
கார்த்திக்கிற்கும்
சேர்த்து வாங்க
சொல்லும்போது
அவள்
உயர்ந்தே நிற்கிறாள்

விளையாடுகையில்
இடறி விழுந்த
வருணிற்கு
எச்சில் தொட்டு
மருந்து வைக்கையில்
மருத்துவராகிறாள்
யாழினி

கலங்கியிருக்கும் பத்மாவின்
கண்களை துடைக்கும்
அபியின் சிறுவிரல்களால்
விட்டோடியவன் எழுதிய
கடைசி கடிதத்தின்
கணம் குறைந்தது

காலுடைந்த
குட்டி நாய்
விரைந்து குணமாக
முணுமுணுத்து
வேண்டுகிறாள்
அந்த குட்டி
தேவதை

அந்த பெரிய
கரடி பொம்மை
பிடிக்கவில்லையென
என் நிலை அறிந்து
பொய் சொன்னவள்
நிச்சயம் சிறுபிள்ளையாக
இருக்க முடியாது

என் கைபிடித்து
கரும்பலகையில்
எதையோ எழுதியவள்
அப்பா இது தான்
உன் பேரு
எனச்சொல்லி
சிரிக்கும்போது
சிலிர்த்தது அவன் உள்ளம்

கல்லுடைத்து
வீடு திரும்பியவன்
கைககளை பிடித்து
மயிலிறகால்
வருடும் சிறு கரங்கள்
இறந்த அவன்
அன்னையையே
நினைவுபடுத்தின


No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...