Friday 22 June 2018

அம்மாவின் முந்தானை


கசியும் குழந்தையின்
கண்ணீரைத் துடைக்கும்
கொதிக்கும் குழம்பு 
சட்டியையும் இறக்கும்
மழையில் நனைந்த
தலையத் துவட்டும்
மழலைக் காதில்
அழுக்கும் அகற்றும்
மடியில் சாய்ந்தால்
மெத்தையாகும்
வெட்கி மறைய
திரையாய் மாறும்
பங்குனி வெய்யிலில்
விசிறியும் அதுவே
மார்கழிப் பனிக்கு
போர்வையும் அதுவே
தோட்டத்தில் காய்களையோ
வீதியில் உதிரி
சாமந்தியோ அதை
முந்தானையே ஏந்தும்
கொதிக்கும் தனலில்
சமைக்கும் போது
உதிர்க்கும் வியர்வையை
ஒத்தி எடுக்கும்
சமையல் முடித்து
கழுவிய கைகளின்
சொட்டும் ஈரமும்
அதுவே உலர்த்தும்
கதைகள் சொல்லி
ஊட்டி முடித்து
வாயைத்துடைக்க
முந்தானை போதும்
அவள் வாசம் பரவிய
முந்தியைப் பற்றி
ஆனந்தமாய் அவள்
குழந்தையும் துயிலும்

No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...