Monday 3 July 2017

கோலம்

"ஒரு நாள்
கெழமைலயாச்சும்
நேரமா எந்திரிச்சு
வாசல் தெளிச்சு
ஒரு கோலம் போடறயா?"
அவளின் வசை கேட்டே
விடிந்தன இவளின்
பண்டிகை நாட்கள்.
இப்போதெல்லாம்
அனுதினம்
அரிசி மாவெடுத்து
கம்பிக்கோலங்கள் இட்டு
ஒரு நிமிடம்
மௌனமாய்
பார்த்து நினைப்பாள்,
மறைந்த அவள் தாயும்
எங்கோ இருந்து
இதை ரசிப்பாள் என


No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...