Thursday 6 July 2017

பிரியாணியும் பீடியும்

மாநகரின் மைய்யத்தில்
ஆடம்பரம் சொட்டும்
அதி நவீன கட்டமைப்பில்
கண்ணாடி சுவர்கள்
கண் கவர் விளக்குகள்
பளிங்கு தரை
தேக்கு மேஜைகள்
மெத்தை ஆசனங்கள்
சீராய் அடுக்கிய
தேக்கரண்டி, முள்கரண்டி.
வெள்ளாவி கண்ட
வெண் கைக்குட்டைகள்
இருந்த குளிரூட்டப்பட்ட
அறையில் தான்
ஈச்சங்குடியில்
இரண்டு ஏக்கர்
குத்தகை நிலத்தில்
சேற்றுழவுடன்
நாற்று நடவும் செய்து
ஊற்றும் வியர்வையில்
ஐந்து திங்கள் விளைந்த
பாசுமதி அரிசியுடன்
அரசனூரில்
பிரசவ வலியில்
அபாய கட்டத்தில்
கிடந்த மனைவியின்
சிகிச்சை செலவிற்காய்
பாயிடம் விற்ற
ஆட்டுக்குட்டியையும் சமைத்து
கண்ணாடி சட்டியில்
மேற்கத்திய உடையில்
கையுறை அணிந்த
தோழரால்
பரிமாறப்பட்டது
அந்த விலையுயர்
மட்டன் பிரியாணி
இன்று ஈச்சங்குடியில்
ஈரத்துணியும்
அரசனூரில்
அரசன் பீடியும்
மதிய உணவாக


No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...