Thursday 3 August 2017

முதல் தாரத்தின் மகள்

என்ன தான் இருந்தாலும்
இன்னொரு வீட்டுக்கு போய்
அடுப்படில இருக்கபோறவளுக்கு
இன்ஜினியரிங்லாம் எதுக்கு
எதனா டிகிரி படிச்சா 
போதாதான்ன்னு
மூன்று வருடம் முன்னர்
இவளுக்கு சொன்னவளே தான்,
"செலவானாலும் பரவாயில்ல,
கீர்த்தனா ஆசைபடறதயே
படிக்க வெக்கலாம்,
நமக்குன்னு இருக்கறது
ஒரே பொண்ணு"
என்று அவரிடம் இன்று பேசுவதை
எதேர்ச்சியாய்க் கேட்டுக் கடந்தவள்
தன் அறையினுள் சென்றதும்
தலையனையைக் கட்டியணைத்து
ஓவென அழுதாள்.
தன் நாட்குறிப்பின் நடுவே
இருந்த பாஸ்போர்ட் சைஸ்
புகைப்படத்திலுள்ள
கனிந்த பார்வையுடன்
மலர்ந்த முகம் கண்டதும்
ஆறுதலடைந்து அமைதியானாள்.
அச்சில் வார்த்தார் போல்
அதே சாயலில்
இவளது முகமும்
மலர்ந்து கிடந்தது
அந்த கல்லூரியின்
அடையாள அட்டையில்,
யாழினி இயற்பியல்
மூன்றாம் ஆண்டு.

****************************************************************************

அவர் வீட்டிலில்லா
சமயங்களிலேயே
அடிபட்டு, மிதிபட்டு,
வசை சொல்லில்
வதைபட்டவள்,
இனி இவள் கையில் என்னவாகப்போகிறாளோ
அவர் ஒரேடியாய்
உறங்கியபின்னர்.

No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...