Wednesday 20 September 2017

எதைப்பற்றி எழுதுவது

பார்வை தொலைத்து
கையேந்துபவனா
கண்கள் பார்த்தும்
கடப்பவனா
முதுகு வளைந்தும்
முழம் போடுபவளா
குறைக்கச் சொல்லி
விலை பேசுபவனா
பசியின் பிடியில்
திருடுபவனா
திருட்டுக் கொடுத்து
கதறுபவனா
பெண்மையைப் பறித்த
மிருகத்தையா
கற்பே அடகாகும்
வறுமையையா
நதிகள் நடத்தும்
அரசியலையா
நிதிகள் எழுதும்
தேர்தலையா
கடலில் எல்லை
கடப்பவனா
கடப்போர் உயிரைப்
பறிப்பவனா
கழுத்தறுக்கும் சாதிய
கத்தியையா
துடித்திறக்கும் சாமானியன்
காதலையா
கனவைப் பறிக்கும்
தேர்வினையா
கனவிழந்தோர் ஆறாத்
துயரினையா
இதில் எதைப்பற்றி
எழுதுவது
கேள்விகள் என்னுள்
எழுகிறது


No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...