Tuesday 19 September 2017

பெரியார்

அன்றவன் கல்வியை
பொதுவாக்கினான்,
அறிவைப் புகட்டியே
வேற்றுமை வேரருத்தான்
இன்று குளங்கள்
மட்டும் பொதுவாகவில்லை
கோவில்களில் மட்டும்
கதவு திறக்கவில்லை
சவரம் செய்தவர் மகன்
சார்க் உச்சி மாநாட்டில்
ஆடைகள் வெளுத்தோர்
ஆடை வடிவமைப்பில்
கல்வி பறிக்கப்பட்டோர்
கல்லூரி பேராசியர்களாய்
பொதுவழி மறுக்கப்பட்டோர்
விண்வெளி ஆராய்ச்சியில்
பொறியியலும் மருத்துவமும்
கிடைக்கப் பெற்றாலும்
மலமள்ளும் இழிநிலையும்
இருக்கத்தான் செய்கிறது
பொதுக்குழாய் நீரும்
பொதுவழியில் தேரும்
வெற்றிதான் எனினும்
போதாது
சகலமும் சமமெனும்
நாளது வரும்வரை
பெரியாரின் விதைகள்
ஓயாது


No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...