Wednesday 20 September 2017

தரம்

இரண்டாம் சிரமுடைய
இனம் ஏதும் உண்டோ

மூன்றாம் கரமுள்ள
மதத்தினர் யாரும் உண்டோ

ஏழாம் அறிவுடையோர்
எட்டுத்திக்கில் உண்டோ

சிவப்பில்லா குருதியுடன்
மேன் மக்கள் உண்டோ

சாவா வரம் பெற்ற
சாதியினர் உண்டோ

பசியென்னும் பிணியில்லா
மாந்தர் மண்ணில் உண்டோ

மனிதர் அனைவருக்கும்
சமமாய் எல்லாம் இருக்க

சமயம் சாதி சன்மார்க்கம்
மொழி இனம் நிறமென

தரம் பிரித்து வாழ்வது
தரக்குறைவன்றோ



No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...