Tuesday 19 September 2017

நாடே காடாகும்

நிலம் நீர்
மட்டுமின்றி
உரம் உழைப்பு
மட்டுமின்றி
திங்கள்கள் சில
அதிலும்
இன்னல்கள் பல.
மழையோ வெயிலோ
தவறினாலும்
தாமதித்தாலும்
கேணியோ குளமோ
தரை தெரிந்தாலும்
கரை புரண்டாலும்
ஒப்புக்கு தீர்ப்புகளும்
ஒப்புக்கொள்ளா
நாடகங்களும்
இயற்கையின் விதி
அரசியல் சதி
விளைவுகள் என்னவோ
விளைச்சலில் தான்.
முதலையும் கொடுக்கா
கொள் முதலைகள்
பசுவை அழித்து
பசுமை யுக்திகள்
தில்லியில் கூவியும்
செவி கேளாமல்
அரை நிர்வாணத்தையும்
கவனிக்காமல்
வாழ்வியல் விவசாயத்தில்
வர்த்தக விஷமேறி
ஜனநாயகம் நுரைதள்ளும்.
பால் பழம் பல்வகை
தானியங்களுடன்
அரிசியும் அரிதாகும்
நாடே காடாகும்.


No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...