அட சாமியாவது சாத்தானாவது
கேலி கிண்டல் செஞ்சிபுட்டு,
நெஞ்சு புடைக்க பேசிபுட்டு
ஜாமத்துல ஊருக்குள்ள
ஒத்ததையில போவும்போது
வழி நெடுக்க நெஞ்சுக்குள்ள
கிலிபுடுச்சி ஆட்டிடுமே
வீடு வந்து சேருமுன்னே
காடு கழனி மெரட்டிடுமே
பனி பொழியும் ராவுலயும்
மொகத்தில் வேர்வை வழிஞ்சிடுமே
பாயில் வந்து சுருளும்முன்னே
நாயின் கொரலுக்கும் நடுங்கிடுமே
பயத்த போக்க வழியில்லாம
வீடுவர வழித்தொனைக்கு
காவல் தெய்வம் அய்யனார
மனசும் வேண்டி அழச்சிடுமே.
கேலி கிண்டல் செஞ்சிபுட்டு,
நெஞ்சு புடைக்க பேசிபுட்டு
ஜாமத்துல ஊருக்குள்ள
ஒத்ததையில போவும்போது
வழி நெடுக்க நெஞ்சுக்குள்ள
கிலிபுடுச்சி ஆட்டிடுமே
வீடு வந்து சேருமுன்னே
காடு கழனி மெரட்டிடுமே
பனி பொழியும் ராவுலயும்
மொகத்தில் வேர்வை வழிஞ்சிடுமே
பாயில் வந்து சுருளும்முன்னே
நாயின் கொரலுக்கும் நடுங்கிடுமே
பயத்த போக்க வழியில்லாம
வீடுவர வழித்தொனைக்கு
காவல் தெய்வம் அய்யனார
மனசும் வேண்டி அழச்சிடுமே.
அருமை..
ReplyDeleteமிக்க நன்றி :)
Delete