மணந்தவன் மறைந்து
பெற்றவன் மறந்து
இல்லத்தில் இடம்
இல்லாது போனபின்
குறைவில்லா இல்லாளிவள்
இல்லாமையின் இறுக்கப்பிடியில்
நிர்கதியின் அர்த்தம் உணர்ந்து
தேய்பிறை வாழ்க்கையில்
ஏமாற்றத்தின் உஷ்ணம்
உண்டாக்கிய உழைப்பின் தாகம்
நெஞ்சுக் குமுறல்களை
அடுப்பில் விரகாக்கி
முனகல்களை நெருப்பில் பொசுக்கி
எஞ்சிய ஈரத்தில்
கரைத்த மாவில்
வார்த்த பனியாரங்கள்
பூத்தன நம்பிக்கையாய்
ஆயிரம் பிள்ளைகள்
அம்மா என்றழைத்திட
சுவையின் விலாசமாய்
இவள் பனியாரக்கடை.
- ச. நந்த குமார்
ஓவியம்: Ravi Palette
பெற்றவன் மறந்து
இல்லத்தில் இடம்
இல்லாது போனபின்
குறைவில்லா இல்லாளிவள்
இல்லாமையின் இறுக்கப்பிடியில்
நிர்கதியின் அர்த்தம் உணர்ந்து
தேய்பிறை வாழ்க்கையில்
ஏமாற்றத்தின் உஷ்ணம்
உண்டாக்கிய உழைப்பின் தாகம்
நெஞ்சுக் குமுறல்களை
அடுப்பில் விரகாக்கி
முனகல்களை நெருப்பில் பொசுக்கி
எஞ்சிய ஈரத்தில்
கரைத்த மாவில்
வார்த்த பனியாரங்கள்
பூத்தன நம்பிக்கையாய்
ஆயிரம் பிள்ளைகள்
அம்மா என்றழைத்திட
சுவையின் விலாசமாய்
இவள் பனியாரக்கடை.
- ச. நந்த குமார்
ஓவியம்: Ravi Palette
No comments:
Post a Comment