Friday 14 April 2017

பனியாரக்காரம்மா

மணந்தவன் மறைந்து
பெற்றவன் மறந்து
இல்லத்தில் இடம்
இல்லாது போனபின்

குறைவில்லா இல்லாளிவள்
இல்லாமையின் இறுக்கப்பிடியில்
நிர்கதியின் அர்த்தம் உணர்ந்து

தேய்பிறை வாழ்க்கையில்
ஏமாற்றத்தின் உஷ்ணம்
உண்டாக்கிய உழைப்பின் தாகம்

நெஞ்சுக் குமுறல்களை
அடுப்பில் விரகாக்கி
முனகல்களை நெருப்பில் பொசுக்கி

எஞ்சிய ஈரத்தில்
கரைத்த மாவில்
வார்த்த பனியாரங்கள்
பூத்தன நம்பிக்கையாய்

ஆயிரம் பிள்ளைகள்
அம்மா என்றழைத்திட
சுவையின் விலாசமாய்
இவள் பனியாரக்கடை.

- ச. நந்த குமார்

ஓவியம்: Ravi Palette



No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...