Tuesday 11 April 2017

பூக்காரம்மா

வாழ்க்கை விதைத்த
சிக்குண்ட கேள்விகளின்
விடைகளை தேடுகையில்
இதயத்தின் குருதிக் கசிவிலும்
விரல்களில் மாலைகள் மலர்கின்றன
தனலென உள்ளம்
கொதித்துக்கிடக்கையில்
ஒரு முழம் வேண்டிய
வாடிக்கையாளரை
இன்முகம் கூடியே
இவளும் அணுகினாள்
இல்லத்து இன்னல்கள்
சுயநிலை விழுங்கினும்
விரல்களின் பணி மட்டும்
ஓயாது நடந்தது
மகள்களின் வாழ்க்கையை
எண்ணி வருந்தியே
ஆழ்துளை கிணற்றைபோல்
நீரின்றி கண்களும்
ஆதவன் அக்கினியும்
பேருந்து புழுதியும்
கடுகளவும் பாதிக்கா
கவனச் சிதறலில்
தன்னையே தொலைத்தவளாய்
பூக்கள் தொடுப்பவளாய்
நடைபாதை இரைச்சல்களில்
இருக்கின்றாள் விடை தேடி

ஓவியம்: Ravi Palette

2 comments:

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...