Friday 22 June 2018

துளிகள்

குரங்குகளாகவே
இருந்திருப்பின்
அகிலமே
அடர்வனமாயிருக்கும்.

*****************

ஒரு விதையில்
காடாகும் 
விந்தையும்;
சில கருவில்
காடழிக்கும்
சிந்தையும்.


*******************

சதுரடி நிலத்திற்கென
விலையான போதே
முருங்கைக்கும்
வாழைக்கும்
வழியின்றிப் போனது.


*********************


என்றோ நதிக்கரைகள்
வளர்த்த நாகரீகம் தான்
அந்நதிகளையே
இன்று சூறையாடுகின்றன



************************

வந்தமர்வோரை
ஏற்கும், மறுக்கும்
உரிமை மட்டும்
நாற்காலிக்கு
இருந்திருந்தால் 
வேட்பாளர்களின்
தரம் கூடிப் போகும்



***********************

எதிர்பாரா 
அதிகாலை
அழைப்புகள்
ஏதும்
நற்செய்தி 
தாங்கி
வருவதில்லை.


*********************

அவசரப்பட்டோமென
ஆதங்கப்படுகையில்
அநேகமாய்
அனைத்துமே
முடிந்து தான் 
போயிருக்கும்.


*********************

அந்த கோரத்
தீ விபத்தில்
கருகிய
பதிமூன்று பேரின் 
சாம்பலை
எப்படிப் பகிர்ந்து
கொடுப்பது
எட்டு
சாதியினர்க்கு


*********************

வார்த்தைகள் மரித்த
அவ்வீட்டின்
தனித்தனி அறைகளில்
முகநூல் பகிரி என
சில ஜி.பிகளோடு
கரைகின்ற இரவில்
அடர் மெளனத்தின்
விசும்பலும்



**************************


ஏதோ ஒரு வீட்டில் 
குழந்தையின் 
அழுகுரல் தான்
இவள் அடி 
வயிற்றை புரட்டி
நெஞ்சை 
கனக்கச் செய்கிறது

No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...