Friday 22 June 2018

ஐந்தைவிட ஆறொன்றும் பெரிதல்ல

யானைகள்
பொய்யுரைப்பதில்லை
பூனைகள்
புறம் பேசுவதில்லை
வண்ணத்துப் பூச்சிகள்
வதந்தி பரப்புவதில்லை
குயில்களும்
குறை கூறுவதில்லை
குரோதத்துடன்
குருவியோ
பாரபட்சம் பார்க்கும்
பருந்தோ
எள்ளி நகையாடும்
எறும்போ
ஏசிப் பேசும்
எருதோ எங்குமில்லை
கோள் மூட்டுதலோ
பொறாமை கொள்ளுதலோ
தற்பெருமை பேசுதலோ
தீண்டாமை பழகுதலோ
துரோகம் வஞ்சனை
வயிற்றெரிச்சல்
கோபம் தாபம்
சூது வாது கிடையாது
பழி போடுதல்
பழி வாங்குதல்
பிறர் துயரில்
மனம் துள்ளுதல்
உயர்திணை
தீக்குணங்கள் ஏதும்
அஃறிணையில்
அறவேயில்லை
ஐந்தைவிட
ஆறொன்றும்
எவ்வகையிலும்
பெரிதேயில்லை.


No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...