Friday 22 June 2018

யார் கரை ஒதுங்கியது

நீள் சாலையின்
அடர் நெரிசலில்
சிக்குண்ட வாகனமாய்
அகண்ட வானின்
அறியா பாதையில்
அறுந்த காத்தாடியாய்
பிடிப்பைத் தேடி
உயிர்த் துடிப்பில்
நீந்தும் எறும்பாய்
ஓயா பசியிலும்
தேயா பொறுமையுடன்
ஒற்றைக்கால் நாரையாய்
வார்த்தைக் கடலில்
மையம் கொண்ட
எண்ணப் புயலில்
எங்கோ தொலைந்து
எழுதி அடித்து
மீண்டும் துவங்கி
சுழலில் சிக்கி
ஆழியில் மூழ்கி
மூச்சிரைத்து
கரை ஒதுங்கியது
இறந்த கவிஞனா
பிறந்த கவிதையா


No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...