Friday 22 June 2018

ஆறறிவு அரக்கர்கள்

வேர் சாய்ந்த
மரத்திற்கு
ஒப்பாரிப் பாடும்
குயில்கள்
இறந்த தட்டானின்
பிரேதத்தை சுமக்கும்
எறும்புகள்
உதிர்ந்த மலரின்
மெளன அஞ்சலியில்
வண்ணத்துப் பூச்சிகள்
வாடும் செடிகளுக்கு
வருத்தம் தெரிவிக்கும்
வண்டுகள்
மரணமும் அழிவும்
இயற்கைக்கு தான்
இந்த ஆறறிவு
அரக்கர்களால்.

No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...