Tuesday 3 July 2018

பட்டாம்பூச்சி

கல்லறைத்தோட்டத்தில்
சிறகடிக்கும்
பட்டாம்பூச்சிகள்
புதைத்த உடல்கள் தான்
உயிர்த்துத்
திரிகிறதோ



*****************


வனக் காவல்
நிலையத்தின்
கயவர் பட்டியலில்
வடை களவாடிய 
காக்கை
அதை ஏமாற்றிய
நரியுடன்
அப்பம் பங்கிட்ட
குரங்கும்.



********************

பசுந்தழையோ
பசை தடவிய தாளோ
பசு செறித்து
தருவதென்னவோ
பால் மட்டுமே



*******************

நேரத்தே வீடு
திரும்பவியலா
காரணத்தினாலோ
வீட்டையும் சுமந்தே
ஊர்கிறது நத்தை.



******************


பசித்த
எறும்பின்
பயணம்
கரும்புத்
தோட்டத்தை
அடைந்தும்
முடியவில்லை



*********************

வழி தவறிய தேனீ
தேடித் திரிந்து
அலைந்து அலுத்து
இறுதியாய்
ஓர் மலரில் 
வந்தமர்ந்ததும்
வெடி முழங்க
பறை கிழிய
கிழவனின் சடலம்
புறப்பட்டது.

No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...