ஏரி ஓடை கிணறுகளும்
தாகத்தில் தவித்திருக்க
நெடு நாள் வறட்சியில்
காடு கழனி வெடிப்புற்று
விதைத்தது முளைக்காமல்
முளைத்தது வளராமல்
வளர்ந்தது பூக்காமல்
பூத்தது காய்க்காமல்
காய்த்தது கனியாமல்
கனிந்தும் விலைபோகாமல்
சோலையூர் கிராமமே
பாலையாய்க் கிடந்தது
இரு ஊர் தள்ளி சென்று
ஒரு குடம் நீரெடுத்து
தங்கம் போல் சேமித்து
கண்ணாக அதைக் காத்து
ஒவ்வொரு துளியையும்
கருத்தாக பயன்படுத்தி
தண்ணீரில் திளைத்த காலம்
தூரத்து ஞாபகமாய்
நீரிருக்கும் திசை நோக்கி
கால்கள் இடம் பெயர
ஆயிரம் குடும்பங்கள்
பாதியாய் குறைந்ததிங்கு
கலப்பையை பிடித்த கைகள்
கட்டுமானப் பணிகளிலே
உணவு படைத்தவர்கள்
உணவகத்தில் வேலையிலே
ஊரிலுள்ள பெரியவர்கள்
கலந்து பேச ஒன்று கூடி
தெய்வத்தால் ஆகுமென
ஒருசேர முடிவெடுத்து
மாரி அது பொழியத்தான்
மாரியம்மன் விழா நடத்தி
நேர்த்திக்கடன் பாக்கியெல்லாம்
நேரத்தே தீர்த்துவைத்து
கழுதைகள் மணம் முடிந்தும்
மனமிரங்கா மழை மேகம்
மாரியப்பன் மாண்ட செய்தி
முரசு கொட்டி அறிவிக்க
மேகமும் மனம் வருந்தி
இரங்கலை தெரிவிக்க
கடைசியாய் கண்ணீரை
தூறலாய் தூறியது.
தாகத்தில் தவித்திருக்க
நெடு நாள் வறட்சியில்
காடு கழனி வெடிப்புற்று
விதைத்தது முளைக்காமல்
முளைத்தது வளராமல்
வளர்ந்தது பூக்காமல்
பூத்தது காய்க்காமல்
காய்த்தது கனியாமல்
கனிந்தும் விலைபோகாமல்
சோலையூர் கிராமமே
பாலையாய்க் கிடந்தது
இரு ஊர் தள்ளி சென்று
ஒரு குடம் நீரெடுத்து
தங்கம் போல் சேமித்து
கண்ணாக அதைக் காத்து
ஒவ்வொரு துளியையும்
கருத்தாக பயன்படுத்தி
தண்ணீரில் திளைத்த காலம்
தூரத்து ஞாபகமாய்
நீரிருக்கும் திசை நோக்கி
கால்கள் இடம் பெயர
ஆயிரம் குடும்பங்கள்
பாதியாய் குறைந்ததிங்கு
கலப்பையை பிடித்த கைகள்
கட்டுமானப் பணிகளிலே
உணவு படைத்தவர்கள்
உணவகத்தில் வேலையிலே
ஊரிலுள்ள பெரியவர்கள்
கலந்து பேச ஒன்று கூடி
தெய்வத்தால் ஆகுமென
ஒருசேர முடிவெடுத்து
மாரி அது பொழியத்தான்
மாரியம்மன் விழா நடத்தி
நேர்த்திக்கடன் பாக்கியெல்லாம்
நேரத்தே தீர்த்துவைத்து
கழுதைகள் மணம் முடிந்தும்
மனமிரங்கா மழை மேகம்
மாரியப்பன் மாண்ட செய்தி
முரசு கொட்டி அறிவிக்க
மேகமும் மனம் வருந்தி
இரங்கலை தெரிவிக்க
கடைசியாய் கண்ணீரை
தூறலாய் தூறியது.