Thursday 12 January 2017

விவசாயி நிலை

பாதம்
பாலையாய்
வெடித்தபோதும்
சோலையைக்
கண்டு
புன்னகைத்தான்.

கதிரவன்
கரங்கள்
கொளுத்தியபோதும்
நெற்கதிர்
தலையசைக்க
மனங்குளிர்ந்தான்.

மண்வெட்டி
பெருவிரலை
வெட்டியபோதும்
சேற்றை
அள்ளிப்பூசி
காயம் மறந்தான்.

வயலே
வீடாய்
உழவே
வாழ்க்கையாய்
நிறைவாய்
உணவு படைத்தான்.

நீரின்றி
பயிர்கள்
தலைசாய
மடியேந்தி
மனமுடைந்து
உயிர் நீத்தான்.

#farmer #death


No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...