பாதம்
பாலையாய்
வெடித்தபோதும்
சோலையைக்
கண்டு
புன்னகைத்தான்.
கதிரவன்
கரங்கள்
கொளுத்தியபோதும்
நெற்கதிர்
தலையசைக்க
மனங்குளிர்ந்தான்.
மண்வெட்டி
பெருவிரலை
வெட்டியபோதும்
சேற்றை
அள்ளிப்பூசி
காயம் மறந்தான்.
வயலே
வீடாய்
உழவே
வாழ்க்கையாய்
நிறைவாய்
உணவு படைத்தான்.
நீரின்றி
பயிர்கள்
தலைசாய
மடியேந்தி
மனமுடைந்து
உயிர் நீத்தான்.
#farmer #death
பாலையாய்
வெடித்தபோதும்
சோலையைக்
கண்டு
புன்னகைத்தான்.
கதிரவன்
கரங்கள்
கொளுத்தியபோதும்
நெற்கதிர்
தலையசைக்க
மனங்குளிர்ந்தான்.
மண்வெட்டி
பெருவிரலை
வெட்டியபோதும்
சேற்றை
அள்ளிப்பூசி
காயம் மறந்தான்.
வயலே
வீடாய்
உழவே
வாழ்க்கையாய்
நிறைவாய்
உணவு படைத்தான்.
நீரின்றி
பயிர்கள்
தலைசாய
மடியேந்தி
மனமுடைந்து
உயிர் நீத்தான்.
#farmer #death
No comments:
Post a Comment