விளைச்சலுக்காய் விஷம் வைத்ததில்
மண்புழுக்கள் நுரை தள்ளின
அவை தவழ்ந்த மண்ணோ
இன்று பொலிவிழந்து தரிசாய்
மண்புழுக்கள் நுரை தள்ளின
அவை தவழ்ந்த மண்ணோ
இன்று பொலிவிழந்து தரிசாய்
மனிதனின் மரவேட்டையில்
குருவிகள் வீடிழந்தன
கோவித்த குயில்களின் மெளனத்தால்
விடியல்கள் கலையிழந்தன
குருவிகள் வீடிழந்தன
கோவித்த குயில்களின் மெளனத்தால்
விடியல்கள் கலையிழந்தன
அணில்களும் உண்ணாவிரதம்
அவை தீண்டா கனிகள் கசப்புற்றன
விதைகள் அடைபட்டன
முளைப்புகள் முடங்கின
அவை தீண்டா கனிகள் கசப்புற்றன
விதைகள் அடைபட்டன
முளைப்புகள் முடங்கின
வண்ணத்துப் பூச்சிகளும்
பறப்பதை நிறுத்தியதில்
சோலைகள் சுயம் தொலைத்து
சோர்வாய் இருந்தன.
பறப்பதை நிறுத்தியதில்
சோலைகள் சுயம் தொலைத்து
சோர்வாய் இருந்தன.
காளைகளை இறைச்சியாக்கியதில்
பசுக்கள் காதல் மறந்தன
சினை ஊசியும் கூடுதலாய் வலித்தது
பசுக்கள் காதல் மறந்தன
சினை ஊசியும் கூடுதலாய் வலித்தது
கன்றுகளை பட்டினிபோட்டு
சுரப்பவற்றை முழுதாய்
கறந்து கயவன் காசாக்கினான்
சுரப்பவற்றை முழுதாய்
கறந்து கயவன் காசாக்கினான்
குஞ்சு பொறிக்கும் கோழியின் கனவும்
தோசைக் கல்லில் உடைபட்டது
புல்லிற்கு அடைக்கலமான ஆடு
இலையில் விருந்தானது
தோசைக் கல்லில் உடைபட்டது
புல்லிற்கு அடைக்கலமான ஆடு
இலையில் விருந்தானது
கூட்டத்தின் கடும் உழைப்பினை
தனியொருவன் அபகரித்தான்.
தேனீக்கள் வேலை நிறுத்தம் செய்ய
மலர்கள் இன்று மலடாயின.
தனியொருவன் அபகரித்தான்.
தேனீக்கள் வேலை நிறுத்தம் செய்ய
மலர்கள் இன்று மலடாயின.
மனிதனின் இழிசெயல் எதிர்த்து
காகங்கள் கோஷம் போட்டன
எறும்புகள் ஊர்வலம் சென்றன
வானம் மழை மறுத்தது
காகங்கள் கோஷம் போட்டன
எறும்புகள் ஊர்வலம் சென்றன
வானம் மழை மறுத்தது
அனைத்தையும் சூரையாடும்
ஆறறிவு சுயநல கூட்டம்
பருந்தின் பசிக்கும் எறும்பின் ருசிக்கும்
இரையாகும் நாள் தூரமில்லை.
ஆறறிவு சுயநல கூட்டம்
பருந்தின் பசிக்கும் எறும்பின் ருசிக்கும்
இரையாகும் நாள் தூரமில்லை.
Kavithai miga miga ARUMAI.Vazhthukkal.
ReplyDeleteSuyanalakkoottam Kavithai ARUMAI.Vazhthukkal.
ReplyDeleteமிக்க நன்றி... :)
DeleteSuyanalakkoottam Kavithai ARUMAI.Vazhthukkal.
ReplyDelete