Friday 5 May 2017

சுயநலக்கூட்டம்

விளைச்சலுக்காய் விஷம் வைத்ததில்
மண்புழுக்கள் நுரை தள்ளின
அவை தவழ்ந்த மண்ணோ
இன்று பொலிவிழந்து தரிசாய்

மனிதனின் மரவேட்டையில்
குருவிகள் வீடிழந்தன
கோவித்த குயில்களின் மெளனத்தால்
விடியல்கள் கலையிழந்தன

அணில்களும் உண்ணாவிரதம்
அவை தீண்டா கனிகள் கசப்புற்றன
விதைகள் அடைபட்டன
முளைப்புகள் முடங்கின

வண்ணத்துப் பூச்சிகளும்
பறப்பதை நிறுத்தியதில்
சோலைகள் சுயம் தொலைத்து
சோர்வாய் இருந்தன.

காளைகளை இறைச்சியாக்கியதில்
பசுக்கள் காதல் மறந்தன
சினை ஊசியும் கூடுதலாய் வலித்தது

கன்றுகளை பட்டினிபோட்டு
சுரப்பவற்றை முழுதாய்
கறந்து கயவன் காசாக்கினான்

குஞ்சு பொறிக்கும் கோழியின் கனவும்
தோசைக் கல்லில் உடைபட்டது
புல்லிற்கு அடைக்கலமான ஆடு
இலையில் விருந்தானது

கூட்டத்தின் கடும் உழைப்பினை
தனியொருவன் அபகரித்தான்.
தேனீக்கள் வேலை நிறுத்தம் செய்ய
மலர்கள் இன்று மலடாயின.

மனிதனின் இழிசெயல் எதிர்த்து
காகங்கள் கோஷம் போட்டன
எறும்புகள் ஊர்வலம் சென்றன
வானம் மழை மறுத்தது

அனைத்தையும் சூரையாடும்
ஆறறிவு சுயநல கூட்டம்
பருந்தின் பசிக்கும் எறும்பின் ருசிக்கும்
இரையாகும் நாள் தூரமில்லை.



4 comments:

  1. Kavithai miga miga ARUMAI.Vazhthukkal.

    ReplyDelete
  2. Suyanalakkoottam Kavithai ARUMAI.Vazhthukkal.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி... :)

      Delete
  3. Suyanalakkoottam Kavithai ARUMAI.Vazhthukkal.

    ReplyDelete

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...