Sunday 7 May 2017

பச்சோந்தி மேகம்

வெளீர் வானம்
திடீரென கருத்தது

சுளீர் வெய்யில்
மேகத்துள் ஒளிந்தது

அசையா மரங்கள்
களியாட்டம் போட்டன

மண்புழுதி கிளப்பி
சுழலொன்று எழுந்தது

ஊசித்தட்டான் கூட்டம்
தாழ்வாக பறந்தது

சாரையாய் எறும்புகள்
புற்றுக்குள் நுழைந்தன

தவளைகள் உற்சாகத்தில்
பாடல்கள் இசைத்தன

சிட்டுக் குருவிகள்
மண்குளியல் போட்டன

கோழிக் குஞ்சுகள்
தாயிடம் ஒதுங்கின

காய்ந்த துணிகளெடுக்க
கால்களும் ஓடின

பெருமழை உண்டென
அனைவரும் நினைக்கையில்

இரண்டே துளிகள்மட்டும்
மண்வந்து சேர்ந்தது

பச்சோந்தி மேகமோ
நிறம்மாறிப் போனது.





6 comments:

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...