வெளீர் வானம்
திடீரென கருத்தது
சுளீர் வெய்யில்
மேகத்துள் ஒளிந்தது
அசையா மரங்கள்
களியாட்டம் போட்டன
மண்புழுதி கிளப்பி
சுழலொன்று எழுந்தது
ஊசித்தட்டான் கூட்டம்
தாழ்வாக பறந்தது
சாரையாய் எறும்புகள்
புற்றுக்குள் நுழைந்தன
தவளைகள் உற்சாகத்தில்
பாடல்கள் இசைத்தன
சிட்டுக் குருவிகள்
மண்குளியல் போட்டன
கோழிக் குஞ்சுகள்
தாயிடம் ஒதுங்கின
காய்ந்த துணிகளெடுக்க
கால்களும் ஓடின
பெருமழை உண்டென
அனைவரும் நினைக்கையில்
இரண்டே துளிகள்மட்டும்
மண்வந்து சேர்ந்தது
பச்சோந்தி மேகமோ
நிறம்மாறிப் போனது.
திடீரென கருத்தது
சுளீர் வெய்யில்
மேகத்துள் ஒளிந்தது
அசையா மரங்கள்
களியாட்டம் போட்டன
மண்புழுதி கிளப்பி
சுழலொன்று எழுந்தது
ஊசித்தட்டான் கூட்டம்
தாழ்வாக பறந்தது
சாரையாய் எறும்புகள்
புற்றுக்குள் நுழைந்தன
தவளைகள் உற்சாகத்தில்
பாடல்கள் இசைத்தன
சிட்டுக் குருவிகள்
மண்குளியல் போட்டன
கோழிக் குஞ்சுகள்
தாயிடம் ஒதுங்கின
காய்ந்த துணிகளெடுக்க
கால்களும் ஓடின
பெருமழை உண்டென
அனைவரும் நினைக்கையில்
இரண்டே துளிகள்மட்டும்
மண்வந்து சேர்ந்தது
பச்சோந்தி மேகமோ
நிறம்மாறிப் போனது.
Nice
ReplyDeleteThank you Kirupa :)
DeleteSituation ku yetha kavidhai.. ��
ReplyDeleteThank you Padma :)
DeletePachchindhi megangale ippa Adikkadi paakarom. Mazhai peiyyama megam ematheette irukku..
ReplyDelete:)
Delete