Wednesday 3 May 2017

துளிகள்

இலவச
அரிசியைத் தான்
எதிர்பார்த்து
இருக்கின்றனர்
இடுகாட்டில் 
எரிப்பவனும்
வயக்காட்டில்
விதைப்பவனும்



மீனுக்கு மட்டுமல்ல
இவனுக்கும்
தெரியாது
எப்பொழுது
பிடிபடுவானென



பட்டுநூலெடுக்க
பரிதவித்திறக்கும்
பட்டுப்புழுவின்
சாபம்தான்
பாடாய்படுத்துகிறதோ
அதை வாங்கி
புடவை நெய்யும்
நெசவாளியை



அறுக்கப்படும்
நெற்கதிர்க்கெல்லாம்
நிர்ணயிக்கப்படும்
விலையே
தீர்மானிக்கிறது
கயிறா விஷமா என்று.



அகரம் கற்பித்து
அறிவினை ஊட்டிய
அன்னை தமிழுக்கு
பட்ட கடனைத்தான்
திருப்பித்தர இயலாமல்
அவ்வப்போது வட்டியாய்
கொடுக்கிறேன் ஒரு
கவிதை.
திடீர் காற்றில்
முறிந்த கிளையில்
கொத்துக் கொத்தாய்
மலர்கள் மரணம்
#மரணம்




No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...