இலவச
அரிசியைத் தான்
எதிர்பார்த்து
இருக்கின்றனர்
இடுகாட்டில்
எரிப்பவனும்
வயக்காட்டில்
விதைப்பவனும்
அரிசியைத் தான்
எதிர்பார்த்து
இருக்கின்றனர்
இடுகாட்டில்
எரிப்பவனும்
வயக்காட்டில்
விதைப்பவனும்
மீனுக்கு மட்டுமல்ல
இவனுக்கும்
தெரியாது
எப்பொழுது
பிடிபடுவானென
தெரியாது
எப்பொழுது
பிடிபடுவானென
பட்டுநூலெடுக்க
பரிதவித்திறக்கும்
பட்டுப்புழுவின்
சாபம்தான்
பாடாய்படுத்துகிறதோ
அதை வாங்கி
புடவை நெய்யும்
நெசவாளியை
பரிதவித்திறக்கும்
பட்டுப்புழுவின்
சாபம்தான்
பாடாய்படுத்துகிறதோ
அதை வாங்கி
புடவை நெய்யும்
நெசவாளியை
அறுக்கப்படும்
நெற்கதிர்க்கெல்லாம்
நிர்ணயிக்கப்படும்
விலையே
தீர்மானிக்கிறது
கயிறா விஷமா என்று.
நெற்கதிர்க்கெல்லாம்
நிர்ணயிக்கப்படும்
விலையே
தீர்மானிக்கிறது
கயிறா விஷமா என்று.
No comments:
Post a Comment