Monday 10 October 2016

அண்ணாச்சிக்கு என்னாச்சி?



மளிகை கடை
அண்ணாச்சி
சிரிச்சு பல
நாளாச்சி

மூனு வருஷம்
முன்னால
கல்லா ரொம்பும்
தன்னால

குடும்ப அட்டை
உள்ளவரும்
அரிசி பருப்பு
வாங்கிவர

வேல செய்யவே
நேரமில்ல
வந்த லட்சுமி
கொஞ்சமில்ல

மூத்த பைய்யன்
படிப்புக்கு
கூட்டு மதிப்பெண்
கம்மியினு

கல்லால இருந்து
காசெடுத்து
கல்லூரி எல்லாம்
சேத்தாரு

மூனாம் வருஷம்
காசு கட்ட
கையில ஏதும்
இல்லாம

வீட்டம்மா சரட
எடுத்து 
அடகு கடைல
வெச்சாரு

சரக்கு எடுத்து
நாளாச்சி
கடையும் நொடிஞ்சி
பாழாச்சி

கடை ஒடிஞ்ச
கததெரிய
போகனும் கொஞ்சம்
பின்னால

சின்ன ஊரு
அதுக்குள்ள
குட்டி கடைங்க
நடுவுல

பளிங்கு கண்ணாடி
கதவு வெச்சி
பலசரக்கு கடை 
தொறக்குது

குளுகுளுனு
வசதியா
வந்தவன் ஆகல
அசதியா

அரிசி பருப்பு
அத்தனையும்
அழகழகா
அடுக்கிவெச்சி

வாங்கறத எடுத்து
வெக்க
வண்டி ஒன்னயும்
தந்துபுட்டு

ஊரு சனங்க
அம்புட்டையும்
காந்தம் போல
இழுத்துப்புட

பங்கு சந்தைல
இருக்கவன்லாம்
உள்ளூர் சந்தைக்கும்
போட்டியிட

காய்கறி வித்த
கெழவியெல்லாம்
இப்ப காணாமலே
போயாச்சி

பலர் வயித்துல
அடிச்சிப்புட்டு
சில வயிருங்க 
வளருது

அண்ணாச்சி கடைய
பொதச்சிப்புட்டு
அம்பானி கடைங்க
மொளைக்குது.















No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...