Friday 25 November 2016

உழைப்போர் உலகம்...

 - விவசாயி
விதைத்ததை விளைவித்து 
வரும்விலைக்கு அதைவிற்று 
விழிகள் இங்கிரண்டு 
விடியல் எதிர்கொண்டு  

- ஆசிரியர் -
கற்றவை கற்பித்து 
கற்பவனைக் கரைசேர்த்து 
காலமெல்லாம் கல்விப்பணியில் 

- மருத்துவர் -
கண்அயரும் காலத்திலும் 
சிகிச்சைக்கு அவசரமென 
சிறுசெய்தி வந்துவிடின் 
அக்கணமே களமிறங்கி 
உயிர்காக்கும் உன்னதத்தால் 
ஊர்போற்றும் உத்தமர்கள்   

- மீனவன்-
கட்டுமரம் எடுத்து
கடலுக்கு தினம் சென்று
பிடித்தோ பிடிபட்டோ 
பிரச்சனைப் புயலில் வாழ்க்கை  

- மேஸ்திரி -
கல் அடுக்கி 
கட்டிடம் அமைத்து 
கசியும் வீட்டில் 
கடைசி வரை  

- நெசவாளி -
பல்லாயிரம் விலைபோகும்
பட்டுத்துணி நெய்பவரும்
தன்மானம் அதைக்காக்க 
கோவணத்துடன் கைத்தறியில்  

- தொழில் நிகழ்முறை அயலாக்க ஊழியர்கள்
-
கடல்கடந்த கண்டத்திற்கு 
கண்ணுறங்கும் நேரங்களில்,
கணிப்பொறிமுன் கண்சிமிட்டா காலங்களில்
காலமெல்லாம் பெருநிறுவனப் பணியினிலே...  

2 comments:

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...