-
விவசாயி -
விதைத்ததை விளைவித்து
வரும்விலைக்கு அதைவிற்று
விழிகள் இங்கிரண்டு
விடியல் எதிர்கொண்டு
- ஆசிரியர் -
கற்றவை கற்பித்து
கற்பவனைக் கரைசேர்த்து
காலமெல்லாம் கல்விப்பணியில்
- மருத்துவர் -
கண்அயரும் காலத்திலும்
சிகிச்சைக்கு அவசரமென
சிறுசெய்தி வந்துவிடின்
அக்கணமே களமிறங்கி
உயிர்காக்கும் உன்னதத்தால்
ஊர்போற்றும் உத்தமர்கள்
- மீனவன்-
கட்டுமரம் எடுத்து
கடலுக்கு தினம் சென்று
பிடித்தோ பிடிபட்டோ
பிரச்சனைப் புயலில் வாழ்க்கை
- மேஸ்திரி -
கல் அடுக்கி
கட்டிடம் அமைத்து
கசியும் வீட்டில்
கடைசி வரை
- நெசவாளி -
பல்லாயிரம் விலைபோகும்
பட்டுத்துணி நெய்பவரும்
தன்மானம் அதைக்காக்க
கோவணத்துடன் கைத்தறியில்
- தொழில் நிகழ்முறை அயலாக்க ஊழியர்கள் -
கடல்கடந்த கண்டத்திற்கு
கண்ணுறங்கும் நேரங்களில்,
கணிப்பொறிமுன் கண்சிமிட்டா காலங்களில்,
காலமெல்லாம் பெருநிறுவனப் பணியினிலே...
விதைத்ததை விளைவித்து
வரும்விலைக்கு அதைவிற்று
விழிகள் இங்கிரண்டு
விடியல் எதிர்கொண்டு
- ஆசிரியர் -
கற்றவை கற்பித்து
கற்பவனைக் கரைசேர்த்து
காலமெல்லாம் கல்விப்பணியில்
- மருத்துவர் -
கண்அயரும் காலத்திலும்
சிகிச்சைக்கு அவசரமென
சிறுசெய்தி வந்துவிடின்
அக்கணமே களமிறங்கி
உயிர்காக்கும் உன்னதத்தால்
ஊர்போற்றும் உத்தமர்கள்
- மீனவன்-
கட்டுமரம் எடுத்து
கடலுக்கு தினம் சென்று
பிடித்தோ பிடிபட்டோ
பிரச்சனைப் புயலில் வாழ்க்கை
- மேஸ்திரி -
கல் அடுக்கி
கட்டிடம் அமைத்து
கசியும் வீட்டில்
கடைசி வரை
- நெசவாளி -
பல்லாயிரம் விலைபோகும்
பட்டுத்துணி நெய்பவரும்
தன்மானம் அதைக்காக்க
கோவணத்துடன் கைத்தறியில்
- தொழில் நிகழ்முறை அயலாக்க ஊழியர்கள் -
கடல்கடந்த கண்டத்திற்கு
கண்ணுறங்கும் நேரங்களில்,
கணிப்பொறிமுன் கண்சிமிட்டா காலங்களில்,
காலமெல்லாம் பெருநிறுவனப் பணியினிலே...
Excellent Nanda !!!
ReplyDeleteThanks a lot Harry :)
Delete