"இதுக்கு மேல ஒரு வார்த்த உன் வாயில இருந்து வந்துச்சு.. மனுஷனா இருக்க மாட்டேன்" கோவத்தின் உச்சத்தில் இருந்த நான் என் மொத்த பலத்தையும் கதவுமேல படார்னு காட்டி சடார்னு கெளம்பீட்டேன். ஒரு இருவது நிமிஷம் கழிச்சு செல்போன் ரிங்க்டோன் கேட்டுச்சு. அத பாத்தா "வொய்ப் காலிங்"னு இருந்துச்சு. எடுக்கறதா வேணாமா யோசிச்சு ஒரு வழியா போன் அட்டென்ட் பண்ணி அமைதியா இருந்தேன். "நான் செஞ்சதெல்லாம் தப்புதாங்க. புத்திகெட்டு பேசீட்டேன், என்ன மன்னிச்சிருங்க. என் கூட பேசுங்க" மறுமுனைல அழுகையோட ஒரு குரல். என்ன சொல்றதுன்னே எனக்கு தெரில. என் சிந்தனை வேற எங்கயோ போய்டுச்சு. யோசிச்சிட்டே இருக்க "என்னங்க.. இருக்கீங்களா?"னு அந்தப்பக்கம் இருந்து கேட்க, கொஞ்சம் சுதாரிச்சிகிட்டு, "உங்க கணவர் இந்த மொபைல்ல இந்த மெட்ரோ ட்ரெயின்ல மிஸ் பண்ணீட்டாருன்னு நெனைக்கறன் மேடம். நான் அண்ணா நகர் ஆக்ஸிஸ் பேங்க்ல தான் ஒர்க் பண்றன். ராஜதுரை நேம். அங்க வந்து கலெக்ட் பண்ணிக்கோங்க"னு சொல்லி கட் பண்ணா, என்னோட மொபைல் ரிங் ஆகறது கேட்டுச்சு. அவளா தான் இருக்கணும்னு ஆர்வமா எடுத்து, டிஸ்பிலேல பாத்தா "மேனேஜர் கால்லிங்"
என் தமிழ் தாகத்தின், தாக்கத்தின் விளைவே, இந்த வலைப்பதிவு. வெறும் நாட்குறிப்பில் முடங்கிக்கிடந்த வரிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் சிறு முயற்சியே இது. என் எண்ண ஓட்டத்தில் உதித்த கவிதைகள், கதைகள், நிகழ்வுகள் இங்கே பகிரப்படும். படித்துப் பாருங்கள், பிடித்தால் பகிருங்கள், பிடிக்கவில்லையெனில் தவறாது பதிவிடுங்கள். கொஞ்சும் தமிழில், கொஞ்சம் பேசுவோம். நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
சிறப்பு பக்கம்
தாத்தா
பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3dnWFmeUcLu4qOh863b169gloJR6BZmNmRhjPQvOQjzp0plVqtReNIKxzcR_QqR4OwS9egaDartIFUH5eOBKH5HBrNQ7iMz8mIN0_Fe1666oETQj0sizmw5DigG18obaRFzddt9zppGKm/s640/OLDMAN.jpg)
-
பொய்யினை நாவில் வைத்து சத்தியம் செய்யும் கரங்கள் புன்னகை உதட்டில் பூசி முதுகை கிழிக்கும் துரோகம் நட்பென நைய்யப் பேசி குழியில் தள்ளும...
-
வகுப்புகளில் இருந்ததைவிட அதிகமாய் மேடைகளில் இருந்தவர்கள்நாங்கள்.. வெறும் மட்டைப் பந்து விளையாடியவர்களுக்கு வளைகோல் பந்து அறிமுகம் கொடுத்த...
No comments:
Post a Comment