Thursday 10 November 2016

"வொய்ப் காலிங்"

"இதுக்கு மேல ஒரு வார்த்த உன் வாயில இருந்து வந்துச்சு.. மனுஷனா இருக்க மாட்டேன்" கோவத்தின் உச்சத்தில் இருந்த நான் என் மொத்த பலத்தையும் கதவுமேல படார்னு காட்டி சடார்னு கெளம்பீட்டேன். ஒரு இருவது நிமிஷம் கழிச்சு செல்போன் ரிங்க்டோன் கேட்டுச்சு. அத பாத்தா "வொய்ப் காலிங்"னு இருந்துச்சு. எடுக்கறதா வேணாமா யோசிச்சு ஒரு வழியா போன் அட்டென்ட் பண்ணி அமைதியா இருந்தேன். "நான் செஞ்சதெல்லாம் தப்புதாங்க. புத்திகெட்டு பேசீட்டேன், என்ன மன்னிச்சிருங்க. என் கூட பேசுங்க" மறுமுனைல அழுகையோட ஒரு குரல். என்ன சொல்றதுன்னே எனக்கு தெரில. என் சிந்தனை வேற எங்கயோ போய்டுச்சு. யோசிச்சிட்டே இருக்க "என்னங்க.. இருக்கீங்களா?"னு அந்தப்பக்கம் இருந்து கேட்க, கொஞ்சம் சுதாரிச்சிகிட்டு, "உங்க கணவர் இந்த மொபைல்ல இந்த மெட்ரோ ட்ரெயின்ல மிஸ் பண்ணீட்டாருன்னு நெனைக்கறன் மேடம். நான் அண்ணா நகர் ஆக்ஸிஸ் பேங்க்ல தான் ஒர்க் பண்றன். ராஜதுரை நேம். அங்க வந்து கலெக்ட் பண்ணிக்கோங்க"னு சொல்லி கட் பண்ணா, என்னோட மொபைல் ரிங் ஆகறது கேட்டுச்சு. அவளா தான் இருக்கணும்னு ஆர்வமா எடுத்து, டிஸ்பிலேல பாத்தா "மேனேஜர் கால்லிங்"



No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...