ஆற்று மணல்
அள்ளி விற்று
ஆறாம் தலைமுறைக்கு
சொத்து சேர்த்து
சேற்று வயல்
கூறு போட்டு
துண்டு துண்டாய்
விற்று தீர்த்து
பாலம் பள்ளி
கட்டுவதாயினும்
சாலை ஆலை
அமைப்பதெனினும்
காசு பார்க்கும்
கலாச்சாரத்தால்
மாசு பட்ட
மக்கள் பிரதிநிதி
வழக்கு மன்ற
நீதி தேவதையும்
அநீதி பக்கமே
அநேக நேரமும்
ஆசையும் ஆஸ்தியும்
ஆளும் உலகில்
அன்பும் அறமும்
பெயரளவில் மட்டுமே
குரூரம் சுயநலம்
ஆட்கொண்ட மனதுடன்
முறைகெட்டு வாழும்
மனித உடல்கள்
கள்ளம் அறியா
உள்ளம் கொண்டு
வேண்டும் அனைவருக்கும்
குழந்தை மனசு.
அள்ளி விற்று
ஆறாம் தலைமுறைக்கு
சொத்து சேர்த்து
சேற்று வயல்
கூறு போட்டு
துண்டு துண்டாய்
விற்று தீர்த்து
பாலம் பள்ளி
கட்டுவதாயினும்
சாலை ஆலை
அமைப்பதெனினும்
காசு பார்க்கும்
கலாச்சாரத்தால்
மாசு பட்ட
மக்கள் பிரதிநிதி
வழக்கு மன்ற
நீதி தேவதையும்
அநீதி பக்கமே
அநேக நேரமும்
ஆசையும் ஆஸ்தியும்
ஆளும் உலகில்
அன்பும் அறமும்
பெயரளவில் மட்டுமே
குரூரம் சுயநலம்
ஆட்கொண்ட மனதுடன்
முறைகெட்டு வாழும்
மனித உடல்கள்
கள்ளம் அறியா
உள்ளம் கொண்டு
வேண்டும் அனைவருக்கும்
குழந்தை மனசு.
அற்புதம்...
ReplyDeleteநன்றி :)
DeleteHa ha ha..conflicts in thinking
ReplyDeleteSuperb well written
ReplyDeleteThank u :)
DeleteWelcome
DeleteThank u :)
ReplyDeleteவார்த்தைகளை மிக அழகாக பயன்படுத்துகிறீர்கள்...
ReplyDeleteநன்றி.. :)
Delete