Thursday 10 November 2016

சில்லறை தட்டுப்பாடு

ஆசையாய் 
சேர்த்தவை
எல்லாம்
அளவுக்கு 
மிஞ்சிய 
அமுதமாய்.
அண்ணலும்
நினைத்திரா
சத்திய
சோதனையில்
அரசன் முதல்
அசரமரத்தடி
ஆண்டி வரை.
ஆனைக்கும்
அடிசறுக்குமாமே
அப்பட்டமாய்
நடந்ததின்று.
ஆயிரங்கள்
தலை குனிந்து
நிற்க
நூறெல்லாம்
இறுமாப்புடன்
அரியணையில்.




No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...