ஒன்றே போதும்
நன்றாய் வளர
அதற்காய் உழைப்போம்
கண்கள் அயர
ஆசைகள் அனைத்தும்
அவனுள் திணித்து
அளவிற்கு அதிகமாய்
அன்பையும் பொழிந்து
சிறிதாய் பிழைகள்
முளைக்கும் போதே
அழுவான் என்று
அழிக்காது விட்டு
பெரிதாய் ஆனால்
சரியாய் போவான்
தவறாய் கணக்கை
தனக்குள் போட்டு
பாசம் காட்டி
வளர்ப்பேன் என்று
பாசக் கயிறை
கழுத்தில் மாட்டி
குறும்புகள் செய்யினும்
கரும்புதான் என்று
கள்ளிச் செடிக்கு
உரங்கள் வைத்து
வாழும் நெறியை
வகுக்கத் தவறின்
தடம் மாறித்தான்
போகும் தளிர்கள்.
நன்றாய் வளர
அதற்காய் உழைப்போம்
கண்கள் அயர
ஆசைகள் அனைத்தும்
அவனுள் திணித்து
அளவிற்கு அதிகமாய்
அன்பையும் பொழிந்து
சிறிதாய் பிழைகள்
முளைக்கும் போதே
அழுவான் என்று
அழிக்காது விட்டு
பெரிதாய் ஆனால்
சரியாய் போவான்
தவறாய் கணக்கை
தனக்குள் போட்டு
பாசம் காட்டி
வளர்ப்பேன் என்று
பாசக் கயிறை
கழுத்தில் மாட்டி
குறும்புகள் செய்யினும்
கரும்புதான் என்று
கள்ளிச் செடிக்கு
உரங்கள் வைத்து
வாழும் நெறியை
வகுக்கத் தவறின்
தடம் மாறித்தான்
போகும் தளிர்கள்.
Wow excellent
ReplyDeleteThanks :)
Delete