Saturday 26 November 2016

தடம் மாறும் தளிர்கள்

ஒன்றே போதும்
நன்றாய் வளர
அதற்காய் உழைப்போம்
கண்கள் அயர

ஆசைகள் அனைத்தும்
அவனுள் திணித்து
அளவிற்கு அதிகமாய்
அன்பையும் பொழிந்து

சிறிதாய் பிழைகள்
முளைக்கும் போதே
அழுவான் என்று
அழிக்காது விட்டு

பெரிதாய் ஆனால்
சரியாய் போவான்
தவறாய் கணக்கை
தனக்குள் போட்டு

பாசம் காட்டி
வளர்ப்பேன் என்று
பாசக் கயிறை
கழுத்தில் மாட்டி

குறும்புகள் செய்யினும்
கரும்புதான் என்று
கள்ளிச் செடிக்கு
உரங்கள் வைத்து

வாழும் நெறியை
வகுக்கத் தவறின்
தடம் மாறித்தான்
போகும்  தளிர்கள்.





2 comments:

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...