Tuesday 15 November 2016

பார்வதியம்மா

ராஜேஷும், பிரீத்தியும் அவங்களோட ரெண்டு வயசு மகள பாத்துக்கறதுக்காக புதுசா ஒருத்தர வேலைக்கு அன்னைக்கு தான் வெக்கறாங்க. அந்த அம்மா வரதுக்காக காத்துட்டு இருக்காங்க. காலிங் பெல் பார்வதி அம்மா வோட வரவ அறிவிச்சுது. என்னலாம் செய்யணும்னு அவசரமா சொல்லி ரெண்டு பேரும் வேலைக்கு புறப்பட்டாங்க. காலைல இருந்து ஓ எம் ஆர் ல ஆரமிக்கற புது ப்ராஜெக்ட்ல பிஸியா இருந்தான் ராஜேஷ். பிரீத்தியும் டாஸ்க், டீம் மீட்டிங்னு நேரம் போறதே தெரியாம இருந்தா. ஒரு ரெண்டு மணி இருக்கும். அப்ப தான் லஞ்ச்கு கேபிடேரியா வந்தா. வீட்டு லேண்ட் லைன்கு  கால் செஞ்சு எல்லாம் எப்படி போகுதுனு கேட்டுகிட்டா. சாப்பிட்டு முடிக்கும் போது அங்க இருந்த டி.வி.ல சென்னைல கடந்த மூனு மாசமா அடிக்கடி காணாம போற குழந்தைகள் கேஸ்ல  போலீசால் சந்தேகப்படற ஆளுனு பார்வதி அம்மா போட்டோ வந்துச்சு. மறுபடியும் பதட்தட்டோட அவசரமா வீட்டுக்கு கால் செஞ்சா, யாருமே போன் எடுக்கல. மறுமுனைல போன் அடிச்சிட்டே இருந்துச்சு. பிரீத்தியோட இதயமும்...



No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...