Thursday 15 December 2016

சும்மா... சில வரிகள்...

வெட்டிய கொய்யா
பறித்த நெல்லி
உடைத்த கரும்பென
அன்று முதலே
பெரிய பங்கை
சிறியவனுக்கு
விட்டுக்கொடுத்த
பாசக்காரன்
பிரித்த பாகத்தில்
கூடுதலாய் ஓரடி
தம்பிக்கு போனதென
நீதிமன்றத்தில்
வழக்கு தொடுத்து.


#siblings #dispute #land #property #case #court


இருசக்கர
வாகனத்தில்
தனியே
போகையிலே,
பள்ளி முடிந்து
வீடு திரும்பும்
பிஞ்சு கால்களை
ஏற்றிக்கொண்டால்,
இருக்கையும்
அழகாகும்
பயணமும்
பயனாகும்.



அதிநவீனத்தால்

அடுக்கலை
அமைத்து
நட்சத்திர
உணவகத்தில்
மண்பானை சோறு...



தனியே
சென்று
இரு குவளை
பெற்று,
பசித்திருக்கும்
பெரியவருக்கு
கொடுத்துக்
குடித்தால்,
தேனீர்
சுவையாகும்
மகிழ்ச்சி
இரண்டாகும்.



புழுக்கம்
***************
இருவழிச்சாலையில்
அரை மணிக்கொரு பேருந்தும்
இருக்கைகளுடன் நிறுத்தம்
என வசதிகள் இருந்தும்
புழுங்கித்தான் கிடக்கிறது மனம்

இருவருடம் முன்பிருந்த
ஒரு வழிப்பாதையும்
நாளுக்கிரு சிற்றுந்தென
அரசமரத்தடி நிறுத்தமே
குளுமையாய் இருந்ததால்.






No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...