Saturday 31 December 2016

2017ல் ஒரு சபதம் எடுப்போம்..

நண்பர்கள் சுற்றம் உறவினர் என பலரும் ஆங்கில புத்தண்டு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் இதே நேரத்தில், வருடத்தின் கடைசி தினம் ஏதோ சற்று கனமாகவே இருந்தது. பயிர்கள் கருகியதில் நெஞ்சடைத்து உயிர் விட்ட விவசாயிகள் பற்றிய தகவல் அது..
பரபரப்பு வாழ்க்கையில் அனைவருமே அவர்களின் தேவைக்காய் ஓடிக்கொண்டிருக்கும் ஓட்டத்தை ஒரு கனம் நிறுத்தி உற்று நோக்க வேண்டிய சோகம் இது.. வானம் பொய்த்து வறட்சி செழிக்க நாம் அனைவருமே காரணம் தான்.. வனங்கள் அனைத்தும் கோடரி ரனங்களுடன். பரிசல் பாதைகள் விரிசல் பூமியாய். வெய்யிலின் உக்கிரத்தில் காய்ந்து வரண்டு கடும் தாகத்தில் ஏரிகளும் குளங்களும். இறந்த ஒவ்வொரு விவசாயியையும் கொன்ற குற்றத்திற்காய் குற்றவாளி கூண்டில் கோடிக்கணக்கான நாம்..
தவறினை திருத்திக் கொள்ள சிறு முயற்சி செய்வோம்.. இதனால் கல்லறைகள் உயிர்த்தெழப்போவதில்லை.. ஆனால் மேலும் கல்லறைகள் உதிக்காது தடுக்கலாம்.. வணிகத்திக்காய், வர்த்தகத்திற்காய் அடகு வைத்த உலகை மீட்கும் பணியில் இறங்குவோம்..

காய்ந்த குளங்களின் காயம் போக
வற்றிய கிணற்றின் வாட்டம் போக
வெடித்த நிலங்களின் ரணம் ஆற
வாடிய பயிர்களின் தாகம் தீர
எரியும் பிணங்களின் தனலினை அணைக்க
புதைத்த உயிர்களின் ஆன்மா குளிர
மழை வரச்செய்வோம்...

புத்தாண்டில் ஒரு சபதம் எடுப்போம்..
ஒரு மரமேனும் நடுவோம்..
மழை வரச்செய்வோம்..


No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...