Saturday 10 December 2016

சாரல்

மரத்தின் கரங்கள்
முகிலினை வருட
புவி அகம் குளிர
பொழிந்தது மழையாம்
#மழை

*********************************************************************************

பத்து மைல் 
தள்ளி
ஒன்பது இருந்ததால்
எட்டாமல் போனது
எட்டோடு முடிந்தது.
#பெண்கல்வி


*********************************************************************************

பல மைல்
பயணம்
பணிக்காய்
மேற்கொண்டு,
பயனின்றி
பரிதாபமாய்
பசியுடன்
பரிதவித்து.
#தேனீ

*********************************************************************************

கொள்ளளவு
தாண்டி
கரைபுரண்டு
அந்நாளில்
கொல்லப்பட்டு
கொள்ளைபோய்
துளியுமின்றி
இந்நாளில்
#காவிரி

*********************************************************************************

ஜாதி பேதம்
இவன் என்றும்
பார்ப்பதில்லை,
ரத்த வெறியன்
அது ஏனோ
தெரியவில்லை.
#கொசு

*********************************************************************************

புறப்பட்ட 
நான்கு கப்பலுமே
எதிர்பாராதவிதமாய்
தண்ணீரில் மூழ்க
வருத்தத்தில் சிறுவன்
#காகிதகப்பல்

*********************************************************************************

அந்த பெருமாள்
அருள்ல தான் 
அவ வீட்ல 
அடுப்பெரியுதாம்.
வைகாசி மாச 
திருவிழால
வளையல் கடை
வெச்சிருத
வள்ளியம்மை
நெனச்சிகிட்டா

#அருள்

No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...