Friday 9 December 2016

பெண்ணெனும் பேராண்மை

மூன்றும் பெண்ணென
விட்டுச் சென்றவனை
எண்ணி வருந்தாது
விழிகள் ஒழுகாது

நெஞ்சில் உரத்துடனே
உழைக்கும் கரத்துடனே
பள்ளி அனுப்பிவிட்டு
சுள்ளிஎடுக்க சென்றாள்

மூன்று வேலையுமே
மூன்று வயிற்றையுமே
முழுதாய் நிரப்பிவிட
மெழுகாய் உருகினாளே

விட்டு ஒதுங்கியதில்
ஆண்மை துளியுமில்லை
கட்டி அணைத்ததுவோ
பெண்ணெனும் பேராண்மை


No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...