சுள்ளிக் காட்டில்
குத்திய முள்ளும்
விறகு வெட்டையில்
ஏறிய சில்லும்
அடுப்பு எரிந்திட
அரிசி பொங்கிட
பட்ட வலிகள்
ஆயிரம் சொல்லும்
விறகினை பிளக்கும்
வியர்வைத் துளிகள்
கண்களில் கலக்கும்
சாம்பல் துகள்கள்
விரைவாய் விறகும்
பற்று வதற்கு
மண்ணெண்ணெய் ஒரு
சிறுமூடி அளவு
எரியும் விறகின்
துக்கம் காட்ட
கரியாய் நிற்கும்
அடுக்களை சுவரும்
பத்து பாத்திரம்
தேய்ப்பதற்கு அடுப்பின்
ஒரு கைப்பிடி
சாம்பல் உதவும்
குப்பை மேட்டில்
கொட்டும் சாம்பலில்
பசளைக் கீரையும்
பசுமையாய் வளரும்
தகதக கனலை
தட்டி எழுப்ப
ஊது குழலின்
சத்தமே போதும்
திருஷ்டி கழிக்கும்
ஒவ்வொரு முறையும்
அடுப்பின் சத்தம்
ஆறுதல் தருமே
கத்திரி வெயிலில்
அடுப்பும் சுடுமே
மார்கழி வந்தால்
அதுவே இதமே
அனலின் மேலே
பானை இல்லையேல்
பூனையும் துயிலும்
அடுப்பின் உள்ளே
சாணம் அணிந்து
கோலம் ஏந்தி
புன்னகை சிந்தும்
பழைய அடுப்பே
நவீன உலகில்
பழைய நினைவிற்கு
அழைத்துச் செல்லும்
அற்புத படைப்பே
ரசனை...
ReplyDelete:) நன்றி
DeleteSuper pa... அழகிய வர்ணனை.... மற்றும் அழகிய வரிகளின் கவிதை தொகுப்பு.....
ReplyDelete:) நன்றி
DeleteAhhaaaaa!... Heart touching words.. Fantastic lines... super ohh super Nandhu....
ReplyDeleteநன்றி நண்பா :)
DeleteArumaiya iruku... Varthaigala romba azhaga payanpaduthi irukinga ...😊👌👍
ReplyDeleteThank you Kirupa Devi :)
Delete