Wednesday 14 December 2016

அடுப்பு


சுள்ளிக் காட்டில்
குத்திய முள்ளும்
விறகு வெட்டையில்
ஏறிய சில்லும்

அடுப்பு எரிந்திட
அரிசி பொங்கிட
பட்ட வலிகள்
ஆயிரம் சொல்லும்

விறகினை பிளக்கும்
வியர்வைத் துளிகள்
கண்களில் கலக்கும்
சாம்பல் துகள்கள்

விரைவாய் விறகும்
பற்று வதற்கு
மண்ணெண்ணெய் ஒரு
சிறுமூடி அளவு

எரியும் விறகின்
துக்கம் காட்ட
கரியாய் நிற்கும்
அடுக்களை சுவரும்

பத்து பாத்திரம்
தேய்ப்பதற்கு அடுப்பின்
ஒரு கைப்பிடி
சாம்பல் உதவும்

குப்பை மேட்டில்
கொட்டும் சாம்பலில்
பசளைக் கீரையும்
பசுமையாய் வளரும்

தகதக கனலை
தட்டி எழுப்ப
ஊது குழலின்
சத்தமே போதும்

திருஷ்டி கழிக்கும்
ஒவ்வொரு முறையும்
அடுப்பின் சத்தம்
ஆறுதல் தருமே

கத்திரி வெயிலில்
அடுப்பும் சுடுமே
மார்கழி வந்தால்
அதுவே இதமே

அனலின் மேலே
பானை இல்லையேல்
பூனையும் துயிலும்
அடுப்பின் உள்ளே

சாணம் அணிந்து
கோலம் ஏந்தி
புன்னகை சிந்தும்
பழைய அடுப்பே

நவீன உலகில்
பழைய நினைவிற்கு
அழைத்துச் செல்லும்
அற்புத படைப்பே


8 comments:

  1. Super pa... அழகிய வர்ணனை.... மற்றும் அழகிய வரிகளின் கவிதை தொகுப்பு.....

    ReplyDelete
  2. Ahhaaaaa!... Heart touching words.. Fantastic lines... super ohh super Nandhu....

    ReplyDelete
  3. Arumaiya iruku... Varthaigala romba azhaga payanpaduthi irukinga ...😊👌👍

    ReplyDelete

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...