Friday 2 December 2016

மழை

காரை வீட்டவன்
கண்ணாடி வழியே
ரசிக்கலாம் மழையினை
தேனீருடனே..
ஒழுகும் நீரை
ஏந்திப் பிடிக்க
ஒடுங்கிய பாத்திரம்
ஓலை வீட்டில்..
உரப்பை ஒன்றை
தலைக்கு விரித்து
கூரை தேடி
நகரும் கால்கள்
வானும் மழையும்
ஒன்றே எனினும்
காணும் கண்கள்
வெவ்வேறன்றோ?


2 comments:

  1. இயற்கையும் கூட ஏழைக்கு எதிரானதே

    ReplyDelete

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...