Monday 12 December 2016

புயல்

வழியணுப்பி
வந்தபின் தான்
வானொலியும்
அறிவித்தது

அடுத்த இரு
நாளிற்கு
அபாயம்
கடலில் என்று

தொடர்பு
எல்லையை
தாண்டிச்
சென்றதனால்

கைப்பேசி
முயற்சியும்
கைவிட்டு
போனது

புயலும்
திசை திரும்ப
இறுதி
முயற்சியாய்

செய்தி
பொய்யாக
தெய்வத்திற்கு
விண்ணப்பம்

ஆத்தாளும்
கடைசியாய்
செவிசாய்க்க
மறுத்துவிட

வலை வீசும்
வாழ்க்கையை
புயல் வீசி
முடித்ததே.

கரை ஒதுங்கி
இருந்தாலும்
கடைசியாய்
பார்த்திருப்பேன்

கிடைக்காமலே
போனதால்
கிடந்திங்கு
தவிக்கிறேன்

உயிர் தின்னும்
கடல் தாயே
என்னுயிரும்
எடுத்துக்கொள்

இரு உயிரை
கரை சேர்க்க
உன்பிழையை
திருத்திக்கொள்

கடலே நீ
கொண்டுள்ள
தண்ணீர் தான்
போதாதா

கூடுதலாய்
என்னுடைய
கண்ணீரும்
தேவையா

ஈடில்லா
இழப்பிற்கு
இழப்பீடு
அறிவிப்பாம்

பிணம் தின்னும்
கழுககளே
அதையும் தின்று
தீர்க்கட்டும்

தோன்றிய
புயலதுவும்
இருநாளில்
கரைசேறும்

சேதமோ
என் வாழ்வில்
கடைசிவரை
இருந்திடும்.




No comments:

Post a Comment

சிறப்பு பக்கம்

தாத்தா

பக்கத்து ஊரில் இருக்கும் பள்ளிக்கு நடந்தே சென்று பாடம் எடுத்த கதையை  பல முறை சொல்லிருக்கிறார் மனக்கணக்கும் விடுகதையும் மண்டிக்...